ஈராக்கில் சமையல் எரிவாயு வெடித்த விபத்தில் 15 பேர் பலி.

ஈராக்கில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

சுலைமானியா (Sulaimaniya) நகரில், குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.

இதில் அருகிலிருந்த 3 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில், 5 வாகனங்கள், பல வீடுகள் பலத்த சேதமடைந்தன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 17 மணி நேரத்திற்கு பின் நிறைவுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.