ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது இனந்தெரியாத நபரொருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேற்கு ஜப்பானின் மேற்கு நகரான நாராவில் இன்று(8) காலை கூட்டமொன்றில் கலந்துகொண்டு, அவர் உரையாற்றிய போது, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அவரை நோக்கி இரண்டு துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவரது மார்பில் துப்பாக்கி ரவைகள் துளைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 42 வயதான சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.