வடக்கு கடற்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா: சிறீதரன்!

சீனா நாட்டின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற கடல் அட்டைப்பண்ணைகள் புதிய புதிய தாக்கங்களை உருவாக்கியுள்ளது. இது வருமானம் கூடிய துறையாக இருப்பினும் கடற்றொழில் துறையிலே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பொருளாதார மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தங்களுடைய கடற்றொழில் துறையில், புதிய கண்டுப்பிடிப்புகளை அல்லது தேடல்களை கண்டறியாத வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.

குறிப்பாக பருத்தித்துறையிலும் மன்னாரிலும் களப்பு முனைகளில் உற்பத்தியாகின்ற மீனினுடைய உற்பத்தி முறைகளும் கூட மெல்ல மெல்ல வீழ்ச்சியடைந்து செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.