கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைக்குள் கருச்சிதைவு எச்சங்கள்!

கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுக்குள்ளான சிசுவின் எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து, பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் மலசலகூடத்திற்கு அண்மையில், ஆரம்ப நிலையில் கருச்சிதைவடைந்து பிரசவித்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

தனியார் நிறுவன வளாகத்தில் குறித்த செய்தியை காட்சிப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.