யாழ் நெல்லியடியில் 10 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 10 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மைதானத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாணவர்கள் ஆசிரியர்கள் நின்றிருந்த வேலை குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் ஆசிரியர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.