நீங்கள் திருமணம் செய்யப் போகிறீர்களா? 3 முக்கிய கேள்விகள்.

திருமணம் ஆவதற்கு முன்பு கணவனும், மனைவியும் நிச்சயம் இந்த மூன்று கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து வைத்துக் கொள்வது முக்கியம் என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.

இரு மனங்கள் சேரும் திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

பராக் ஒபாமா மிஷெல் இருவரும் சிறந்த கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.

இந்த நிலையில் தங்களைப் போன்று மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த மூன்று கேள்விகளை ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்வது முக்கியம் என ஒபாமா கூறியுள்ளார்.

அந்த மூன்று கேள்விகள் இதோ

உங்கள் துணை எதில் ஆர்வமிக்கவர்?

நீங்கள் உங்கள் வாழ்வின் பெரும் பகுதியை எல்லாரைவிடவும் உங்கள் துணைடன் செலவிடுவீர்கள். 

ஆகவே அவர் ஆர்வ மிக்கவராக இருக்க வேண்டும், அவர் எதில் ஆர்வாமாக இருக்கிறார் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும் எனக் கூறுகிறார் ஒபாமா.

 அப்போதுதான் உங்கள் துணை என்ன நினைக்கிறார்? என்ன செய்யப்போகிறார் ? என்பதை கணித்து அதற்கேற்றவாரு நீங்கள் நடந்து கொள்ள முடியும். இல்லை என்றால் மொத்த வாழ்க்கையுமே கடினமாகிவிடும் எனக் கூறியுள்ளார்

உங்க துணை நகைச்சுவை உணர்வுள்ளவரா?

உங்களுக்கு வரும் துணைக்கு நகைச்சுவை திறன் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் ஒபாமா. தான் செய்யும் ஒரு செயலில் அவரால் நகைச்சுவையை உணர முடிகிறது என்றால் அவர் உங்களின் வாழ்வின் ஒரு பொக்கிஷமாக இருப்பார்.

ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில தருணங்களில் சலிப்பு வரும் அப்போது உங்கள் துணையிடம் இருக்கும் நகைச்சுவை குணம் தான் உங்கள் வாழ்க்கையினை அழகாக்கும். 

உங்களின் திருமண வாழ்க்கையினை சிறப்பாக்கும் என ஒபாமா கூறுகிறார்.

உங்க துணை சிறந்த பெற்றோராக இருப்பாரா?

இந்த கேள்வி மிக முக்கியம் எனக் கூறும் ஒபாமா இந்த கேள்விதான் உங்கள் துணையை திருமணம் செய்யலாமா வேண்டாமா என முடிவு செய்ய உதவும் என்கிறார்.

உங்கள் வாழ்வின் பொக்கிஷமாக உள்ள குழந்தைகளுக்கு அன்பான, அக்கறையான, நல்ல பண்புகளை விதைக்க கூடியவராக இருப்பது முக்கியமானதும் அவசியமானதும் கூட என ஒபாமா கூறியுள்ளார்.

உங்கள் வாழ்க்கையின் துணையை தேர்ந்தெடுக்கும் முன்பு இந்த மூன்று கேள்விகளுக்கான விடையினை தெரிந்து கொண்ட பின்பு திருமணத்தை முடிவு செய்யலாம் எனக் கூறியுள்ளார்.