புத்தளத்தில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பீடி இலைகள்!

புத்தளம் (Puttalam) களப்பு கரையோரப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலை உறைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இன்று சட்டவிரோத பீடி இலை உறைகள் காணப்படுவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்தே அவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சுமார் 19 உறைகளில் 513 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பீடி இலைகள் சுமார் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானவை என தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை புத்தளம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.