ரோஹித் – கோலி ஓய்வு!

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

17 ஆண்டுகளின் பின்னர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றதைத் தொடர்ந்து குறித்த இருவரும் இவ்வாறு ஓய்வினை அறிவித்துள்ளனர்.

125 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 4,188 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அத்துடன் 159 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4,231 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.