15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயாரின் காதலன் கைது

15 வயதுடைய சிறுமியை வன்புணர்வு செய்து கர்ப்பம் தரிக்க காரணமான, தாயாரின் காதலன் புத்தல பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவரது தாயார் அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் வசித்து வந்ததாகவும், அவர் சிறுமியை பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சிறுமிக்கு தொடர் வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், தாயாரின் காதலனே கர்ப்பத்திற்கு காரணமென்பது தெரிய வந்தது.

44 வயதான சந்தேக நபர் வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.