கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலி

கிளிநொச்சி பகுதியில் வீட்டில் இருந்த ‘பிளக்கில்’ கைபிடியற்ற ‘ஸ்குரு ட்ரைவரை’ (screwdriver) செலுத்திய 4 வயதுச் சிறுமி மின்தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியில் கடந்த 30ம் திகதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்ரன் ஜினேசன் ஜினேஜினி என்ற 4 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

ஸ்குரு ட்ரைவர் ஊடக மின் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியின் உடல் கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.