யாழில் சடலமாக மீட்கப்பட்ட நபர் – மரணத்தில் பொலிஸார் சந்தேகம்

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் அளவுக்கு அதிகமான போதை ஊசி ஏற்றியமையால் உயிரிழந்தாரா?

என சந்தேகம் எழுந்திருக்கின்றது. இணுவில் பகுதியை சேர்ந்த தங்கராசா திலீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றமுன்தினம் ஞாயிற்றுக் கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது.

மேலும் குறித்த நபருடன் மேலும் சிலர் இருந்ததாக கூறியிருக்கும் பொலிஸார் அவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர்.