மேலும் மூன்று பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தமிழகத்தின் தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கடற்கரையை இன்று (1) அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

அவர்களை மீட்ட மெரைன் பொலிசார் ராமேஸ்வரம் மெரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இருந்து இதுவரையில் தமிழகத்திற்கு 83 இலங்கை தமிழர்கள் அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.