யாழ்.மிருசுவில் பகுதியில் பெண் மீது வாள்வெட்டு – கூலிப்படையை சேர்ந்தவன் கைது

யாழ்.மிருசுவில் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் யாழ்.பொலிஸ் புலானாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து அனுப்பபட்ட பணத்திற்காகவே குறித்த பெண் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கைதான நபர் பொலிஸாரிடம் வழங்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருதாவது,

2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேதிகமாக யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் 2 ஆண்டுகளின் பின்னர் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பணம்

மற்றும் அறிவுறுத்தலில் இந்த தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒட்டுசுட்டான் மற்றும் பாலாவி பகுதிகளில் 3 மாதங்களுக்கு முன் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடனும்

சந்தேக நபருக்கு தொடர்புள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.