யாழில் போதையில் வந்த தந்தை 5 வயது மகள் மீது தாக்குதல் – சிறுமி வைத்தியசாலையில்

குறித்த சம்பவம் கொடிகாமம் கெற்பேலி மேற்கு மிருசுவில் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத சமயம் நிறை-போதையில் வீட்டுக்குவந்த தந்தை 5 வயதான சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்

தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுமி கை முறிந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.