யாழில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் பலி

டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி கடுமையான காய்ச்சலுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.