சனத் ஜயசூரிய பிரதான பயிற்றுவிப்பாளராக நியமனம் 

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அவர் 01 ஒக்டோபர் 2024 முதல் 31 மார்ச் 2026 வரையிலான காலப்பகுதிக்கு தொடர்புடைய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை அணியின் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு இலங்கை கிரிக்கட் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது